பொதுத் தேர்வுக்கு பள்ளிகள் தயார்: பள்ளிக் கல்வித்துறை!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 25, 2020

Comments:0

பொதுத் தேர்வுக்கு பள்ளிகள் தயார்: பள்ளிக் கல்வித்துறை!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக பள்ளிகள் தயார் என பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார். அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 - மொழிப்பாடம், ஜூன் 17 - ஆங்கிலம், ஜூன் 18 - கணிதம், ஜூன் 22 - அறிவியல், ஜூன் 24 - சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும். மேலும் விடுபட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது பள்ளிகள் அனைத்தும் தேர்வு எழுதும் வகையில் தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களாக இருந்த பள்ளிகளும் தேர்வுக்காக தயார் செய்யப்பட்டு வருகிறது. பேருந்து வசதி ஏற்பாடுகள் குறித்தும் அலோசித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews