பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 27, 2020

Comments:0

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விடுத்துள்ள எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பொதுமுடக்கத்தின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் முன்னதாக, கரோனா எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகும் என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே ஒரு சில மணி நேரம் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மாணவர்கள் படிப்பதற்கு இணையவழி வகுப்புகள் உகந்த சூழலாக இருக்காது என அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கக்கூடாது - ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews