E- PASS பெற்று மாணவர்களை அழைத்து வர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 20, 2020

Comments:0

E- PASS பெற்று மாணவர்களை அழைத்து வர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 மற்றும் பத்தாவது பொதுத் தேர்வு எழுதும் வெளி மாவட்டத்தில் உள்ள 3756 மாணவர்களை E PASS பெற்று அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னன் தெரிவித்தார் தமிழகம் முழுவதும் ஜூன் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது இதற்கான மேற்கொண்டு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 310 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 21 ஆயிரத்து 303 மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.
இதனை தொடர்ந்து ஜூன் 16ம் தேதி பிளஸ் 1 வகுப்புக்கான விடுபட்ட தேர்வு நடைபெறுகிறது இதனையொட்டி தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள் பங்கேற்ற பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்நன் மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் ஆகியோர் பங்கேற்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தேர்வை நடத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். அப்போது கரோணா நோய் பரவல் இருப்பதால் தேர்வு மையங்களில் கிருமிநாசினி தெளித்தும் மாணவர்கள் முக கவசம் அணிந்து வருவதற்கான நடவடிக்கைகள், மாணவர்கள் தொற்று நோய் உடையவர்களாக இருந்தால் அவர்களுக்கென தனி அறையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட தகவல்களை தெரிவித்தனர்
பொது தேர்வு தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் கூறியது பொதுத்தேர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மேற்பார்வை பணிக்கு தேவைப்படுகின்ரணர். இதனால் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் போன்றவர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளோம் தேர்வு மையங்களை கிருமி நாசினி தெளித்து தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த இங்கு தங்கி படித்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவியர் தற்போது அவரது சொந்த ஊரில் இருப்பதால் E-PASS மூலம் அவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நாமக்கல், திருச்செங்கோடு இரு கல்வி மாவட்டத்தில் 310 பள்ளிகள் தேர்வு மையங்களாக அமைக்கப்படுகின்றன. இத்தேர்வை 813, பிளஸ் 1 வகுப்பில் 948 நாமக்கல் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் வெளிமாவட்ட தவர் 682 பேர் பிளஸ் 1 வகுப்பில் ஆயிரத்து 413 பேர் உள்ளனர் .இவர்கள் அனைவரும் தேர்வுக்கு இரண்டு நாள் முன்பாக அந்த பள்ளிகளுக்கு வந்திருக்க வேண்டும் அதற்கான நடைமுறைகளை தலைமை ஆசிரியர்கள் உடனடியாக தொடங்க அறிவுறுத்தி உள்ளோம் என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews