கல்வி ஊழியர்களுக்கு சம்பளம் அறநிலைய துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 16, 2020

Comments:0

கல்வி ஊழியர்களுக்கு சம்பளம் அறநிலைய துறை உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, கல்வி நிறுவனங்களில் பணி புரியும், தொகுப்பூதிய ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்கப்பட்டது.
ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டின் கீழ், 54 கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதில், 42 கல்வி நிறுவனங்களில், சுயநிதி பிரிவு களும் இயங்குகின்றன. அவற்றில், தொகுப்பூதியத்தில் மட்டும், 1,000 பேருக்கு மேல், பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு காரணமாக, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.இது குறித்து, நேற்று முன்தினம், நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அறநிலைய துறை கமிஷனர், பணீந்திர ரெட்டி உத்தரவுப்படி, கல்வி நிறுவன ஊழியர்களுக்கு, உடனடியாக சம்பளம் வழங்கப்பட்டது.
மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பணிபுரிபவர்களின், சம்பள கணக்கு குறித்த விபரங்களை, தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். வரும் காலங்களில், 'ஆன்-லைன்' பரிவர்த்தனை மூலம், சம்பளம் பட்டுவாடா செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews