கடும் நிதி நெருக்கடி !! தமிழக அரசு புதிய திட்டம் !! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

Comments:0

கடும் நிதி நெருக்கடி !! தமிழக அரசு புதிய திட்டம் !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , ஊரடங்கு நீடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.இந்நிலையில் பணப்பறிமாற்றம் இல்லாத சூழ்நிலை தற்போது நிலவி வருகிறது. பணப் புழக்கத்தை அதிகரிக்க , பதிவு துறை அலுவலகங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, அதனை சார்ந்து இயங்கும் பத்திர எழுத்தாளர், ஸ்டாம்ப் விற்பனையாளர்கள், மற்றும் நகல் எடுக்கும் கடைகள் என அனைத்தும் இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தமிழகம் முழுவதும் இயங்கி வரும் 578 பதிவுத்துறை அலுவலகங்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து, கண்கானிப்பதும் இயலாதது என்பதால் பத்திரப்பதிவு உள்ளிட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் இயங்க தடை விதிக்கக்கோரி செந்தில் வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள், சத்தியநாராயணன், நிர்மல் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பத்திரப்பதிவு அலுவலகங்கள் ஊரடங்கு நேரத்தில் செயல்பட்டால் கொரொனோ தொற்று பரவ வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும் இதை சரி செய்வதற்கும், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள் கடன் பெற நிறுவனங்கள் பதிவு செய்வதற்கும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படுவது அவசியமானது என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. மேலும், தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே குறிப்பிட்ட அளவு நபர்களை மட்டுமே அனுமதித்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் பத்திரப்பதிவு துறை செயல்படுவதில் ஏதேனும் புகார்கள் இருந்தால் அதை பத்திரப்பதிவு குறைத்தீர் மையத்திற்கு அளித்தால் அதை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தமிழக அரசு தெரிவித்ததை பதிவு செய்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews