சட்ட கல்லுாரிகளில் 'ஆன்லைன்' கல்வி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 29, 2020

Comments:0

சட்ட கல்லுாரிகளில் 'ஆன்லைன்' கல்வி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சட்ட கல்லுாரிகளில், 50 சதவீத பாடங்களை, 'ஆன்லைனில்' நடத்துவதற்கு, சட்ட பல்கலை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவுரைகள், கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக சட்ட கல்லுாரிகளில், ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்த, சட்ட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, சட்ட படிப்புகள் இயக்குனரகம், சட்டத்துறை செயலகம், தமிழ்நாடு சட்ட பல்கலை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து, ஆலோசனை நடத்தி, ஆன்லைனில் பாடங்களை நடத்துவதை அதிகப்படுத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து, சட்ட கல்லுாரி முதல்வர்களுக்கு, உரிய அறிவுறுத்தல்களை, சட்ட பல்கலை வழங்கியுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல், 50 சதவீத பாடங்களை, கட்டாயமாக ஆன்லைன் வாயிலாக நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதேபோல, வாய்மொழியில் நடத்தப்படும், 'வைவா' தேர்வுகளையும், ஆன்லைனில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, சட்ட பல்கலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆன்லைனில் சட்டக்கல்லூரியின் பாடத்திட்டங்களை நடத்த தமிழக சட்டத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உத்தரவின் படி அனைத்து சட்டக்கல்லூரி முதல்வர்களுடன் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூகுல் கிளாஸ் ரூம், வாட்ஸ் அப் ஆகிய செயலிகள் மூலம் பாடத்திட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
ஊரடங்கு உத்தரவு தொடர்வதையடுத்து புதுப்பாக்கம் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருவதாக கல்லூரி தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை அடுத்துள்ள புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 1,250 பேர் 5 ஆண்டு சட்டப்படிப்பையும் 20 பேர் சுற்றுப்புற சூழல் சட்டப் படிப்பும் படித்து வருகிறார்கள். ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளின் கல்வி பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு இணைய தளத்தின்மூலம் பாடங்களை நடத்த வேண்டும் என்று சட்டக்கல்வி இயக்குனர் சந்தோஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு கூகுள் வகுப்பறை, கூகுள் மீட்டிங் ஜூம் வீடியோ செயலி, டெலிகிராம் செயலி ஆகியவற்றின் மூலம் பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த நேரடி இணையதள பாடமுறை மூலம் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பான பயிற்சியும், அவர்களின் சந்தேகங்களுக்கு உடனடியாக தீர்வும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews