தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 26, 2020

Comments:0

தேவைப்பட்டால் கொரோனா தடுப்பு பணிக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கரட்டுப்பாளையம், ஆண்டிபாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை ஆகிய 5 ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன் தலைமை தாங்கினார். நம்பியூர் தாசில்தார் வெங்கடேஸ்வரன், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம், நம்பியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மா.பாவேசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, வருவாய் துறை சார்பில் 14 பேருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணை, 35 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான், மருத்துவ காப்பீடு வழங்கினார். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:- ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர் தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்டக் குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்படும். மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள், சிறு வியாபாரிகளுக்கு சிறு கடன்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்காக இப்பகுதியில் உள்ள மாவட்ட வங்கிகள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கருத்துரைகள் கேட்கப்பட்டுள்ளது. அதில் அவர்கள் மாத தவணை செலுத்தும் தொகை 6 மாத காலத்திற்கு பின்பு செலுத்துமாறு செய்யப்படும். நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 ஊராட்சிகள் உள்ளது. இதில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அருகே உள்ள 5 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணிகள் தொடங்கப்படவில்லை. மீதமுள்ள 10 ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்படும். இதில் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முதியவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோபி சட்டமன்ற தொகுதி முழுவதும் 982 தூய்மை பணியாளர்களுக்கு காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் அம்மா உணவகத்தை பேரூராட்சி பகுதிகளில் செயல்படுத்தும் எண்ணம் எதுவும் அரசுக்கு இல்லை. பேரூராட்சி பகுதிகள் ஊராட்சிகளை ஒட்டியே உள்ளதால் பெரிய அளவு உணவு தேவைகள் இல்லை. தற்போது பேரிடர் காலமாக உள்ளதால் அரசின் சார்பிலும் தனியார் பொதுநல அமைப்புகளின் சார்பிலும் நம்பியூர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் உணவு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 30 நாட்களாக இப்பணிகள் நடக்கிறது. அதன் மூலம் அரசு பணியாளர்கள், காவலர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஏழை எளியவர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என தினமும் 500 பேருக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews