'நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிப்பர்': அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 15, 2020

Comments:0

'நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் சாதிப்பர்': அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'நீட் தேர்வில், இந்தாண்டு, அரசு பள்ளி மாணவர்கள், 100 பேர் வரை தேர்ச்சி பெற்று, வரலாறு படைப்பர்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - ஈஸ்வரப்பன்: நீட் தேர்வால் அரசு பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஒரு அரசு பள்ளி மாணவர் கூட, நீர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.அமைச்சர் செங்கோட்டையன்: இந்த ஆண்டுக்கான, பிளஸ் 2 பாடத்திட்டம் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை படித்தாலே, நீட் தேர்வு மட்டுமல்ல, மத்திய அரசு நடத்தும் மற்ற போட்டி தேர்வுகளிலும், எளிதாக வெற்றி பெற முடியும். இந்த பாட திட்டத்தை கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர்.பொதுத்தேர்வு முடிந்ததும், 3,000 அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வு குறித்து, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களுக்கு, உணவு, தனியார் விடுதிகளில் தங்கும் வசதி ஆகியவை, 35 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு, அரசு பள்ளிகளை சேர்ந்த, 100 மாணவர்கள் வரை, நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராகும் வரலாறு படைக்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews