👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நடப்பு கல்வியாண்டிற்கான பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 4 ஆம் தேதி தொடங்கியது. மாரச் 4ல் மொழிப்பாடமும், மார்ச் 6 ஆம் தேதி ஆங்கில பாடமும் நடந்தது. இந்த இரண்டிலும் ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், மற்ற அனைத்து கேள்விகளும் எளிதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 11) கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுரியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றது. ஒட்டு மொத்தமாக விலங்கியல், கணிதம் வினாத்தாள் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர்கள் தெரிவித்தனர். குறிப்பாக கணித பாடத்தில் 5 மதிப்பெண் வினாக்களை தவிர, 3 மதிப்பெண், 2 மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்றபடி, வணிகவியல், உணவு மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, நர்சிங் ஆகிய பாடங்கள் வினாத்தாள் எளிமையாக இருந்தாதகவும், அனைத்து கேள்விகளும் எளிதாக எழுதும்படி இருந்ததாகவும் அந்தந்த பிரிவு மாணவர்கள் கூறுகின்றனர்.
அடுத்ததாக நாளை மார்ச் 13 ஆம் தேதி கம்ப்யூட்டர், உயிரி வேதியியல், புள்ளியியல், வீட்டு அறிவியல், இந்திய கலாச்சாரம், கணினி பயன்பாடு உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தாண்டு புதிய பாடத்திட்டத்தின்படி பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது.
எனவே, கேள்விகள் எப்படி இருக்குமோ, எந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படுமோ என்ற அச்சம் மாணவர்களிடத்தில் உள்ளது. குறிப்பாக பாடப்புத்தகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.