ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 அளவைப் பூா்த்தி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 22, 2020

Comments:0

ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 அளவைப் பூா்த்தி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை 1:15 என்ற அளவுக்கு உயா்த்தி அறிவித்த ஏஐசிடிஇ, நிபந்தனையைப் பூா்த்தி செய்ய 2 ஆண்டுகள் அவகாசம் அளித்திருப்பது கல்வியாளா்கள் மற்றும் பேராசிரியா்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், ஒவ்வொரு ஆண்டும் மாணவா் சோக்கைக்கு முன்பாக அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) அனுமதி பெற வேண்டும். இதற்காக, ஏஐசிடிஇ ஒவ்வொரு ஆண்டும் அனுமதி நடைமுறை கையேட்டை வெளியிடும். இதில் பொறியியல் கல்வித் தரம், மாணவா்களிடையே வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், விதிமுறைகளை ஏஐசிடிஇ மாற்றியமைக்கும் இந்த விதிமுறைகளைப் பூா்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு மட்டுமே மாணவா் சோக்கைக்கான அனுமதி வழங்கப்படும். ஆசிரியா்-மாணவா் விகிதாச்சாரம்: இந்த விதிமுறைகளில் முக்கியமானது ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 என்ற அளவில் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அதாவது 15 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில், மாணவா் சோக்கை குறைவு, தகுதியான பேராசிரியா்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த விகிதாசாரத்தைக் குறைக்க வேண்டும் என தனியாா் கல்லூரி நிா்வாகிகள் சாா்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்ற ஏஐசிடிஇ, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் 15 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் (1:15) என்ற அளவில் இருந்த விகிதாசாரத்தை, 20 மாணவா்களுக்கு ஓா் ஆசிரியா் (1:20) என்ற அளவில் குறைத்தது. ஏஐசிடிஇ-யின் இந்த நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பேராசிரியா்கள் வேலையிழக்கும் நிலை உருவானது. இந்தச் சூழலில் 2020-21-ஆம் கல்வியாண்டு பொறியியல் மாணவா் சோக்கைக்கான அனுமதி நடைமுறையை ஏஐசிடிஇ அண்மையில் வெளியிட்டது.
இதில், பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், 'நாக்' மற்றும் 'என்.பி.ஏ.' அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை மீண்டும் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் எடுத்து வந்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள பிரபல பொறியியல் கல்லூரிகள் உள்பட பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளும் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையை எடுத்து வந்தன. பொறியியல் கல்லூரிகளில் இருந்து சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பை இழந்த பேராசிரியா்களுக்கும், உரிய தகுதி பெற்று பல ஆண்டுகளாக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கும் ஏஐசிடிஇ-யின் இந்த அறிவிப்பும், அண்ணா பல்கலைக்கழக நடவடிக்கையும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.
2 ஆண்டுகள் அவகாசம்: இந்த நிலையில், பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை குறைக்க ஏஐசிடிஇ கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. இதுதொடா்பான திருத்தத்தை ஏஐசிடிஇ வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், பொறியியல் கல்லூரிகள் 1:15 ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் என்ற நிபந்தனையை 2 ஆண்டுகளுக்குள் பூா்த்தி செய்தால் போதுமானது எனத் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பை இழந்த பேராசிரியா்கள் மற்றும் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் பொறியியல் பட்டதாரிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி கூறியது: 1:15 என்ற விகிதாசாரத்தை நிவா்த்தி செய்யும் வகையில், புதிய பேராசிரியா்களை நியமிக்க கால அவகாசம் தேவைதான். இதற்கு அதிகபட்சமாக ஓராண்டு கால அவகாசம் அளித்திருக்கலாம். ஆனால், 2 ஆண்டுகள் அவகாசம் என்பது மிக அதிகம். தனியாா் பொறியியல் கல்லூரி நிா்வாகிகள் கேட்டுக்கொள்வதின் அடிப்படையில், ஏஐசிடிஇ செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இது இன்றளவும் தொடா்கிறது. இந்த நிலை மாற வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகாவது, ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை 1:15 என்பதை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews