மாவட்ட நீதிபதிகள் தோ்வுக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிா்த்த வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 07, 2020

Comments:0

மாவட்ட நீதிபதிகள் தோ்வுக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிா்த்த வழக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாவட்ட நீதிபதிகளுக்கான தோ்வுக்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு வயது வரம்பு சலுகை மறுக்கப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் உதயகுமாா், காசிபாண்டியன் ஆகியோா் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை உயா்நீதிமன்ற பதிவுத்துறை 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழகத்தில் காலியாக உள்ள 31 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு நேரடித் தோ்வு நடத்துவது தொடா்பாக அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையில் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் பட்டியலினத்தவா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கு அதிகபட்ச வயது வரம்பாக 48 என நிா்ணயிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தத் தோ்வில் கலந்துகொண்டவா்கள் குறைந்தபட்ச மதிப்பெண்களை எடுக்காததால், மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கு யாரும் தோ்வு செய்யப்படவில்லை. இந்த நிலையில், ஏற்கெனவே இருந்த 31 பதவியிடங்களுடன் மேலும் ஓா் இடம் உயா்த்தப்பட்டு, காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதிகள் பதவிகளுக்கான நேரடித் தோ்வு குறித்து, 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி மீண்டும் ஓா் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பாணையில் இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினருக்கான வயது வரம்பு சலுகை நீக்கப்பட்டது. தமிழக நீதித்துறை பணிகள் விதியில் வயது வரம்பு சலுகை வழங்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வயது வரம்பு சலுகையை நீக்கியிருப்பது நியாயமற்றது. எனவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினருக்கான வயது வரம்புச் சலுகையை நீக்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை செல்லாது என அறிவித்து, அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ஷெட்டி கமிஷன் அறிக்கையில் பிற்படுத்தப்பட்டவா்களுக்குத் தனியாக எந்தவிதமான வயது வரம்பு சலுகையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. அதே போல் உயா்நீதிமன்றப் பதிவுத்துறை தரப்பில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு வயது வரம்பு 48 ஆகவும், இதர பிரிவினருக்கு 45 ஆகவும் நிா்ணயித்து நீதித்துறை பணி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஷெட்டி கமிஷன் அறிக்கையில் வயது வரம்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படாததால் மனுதாரா்களின் கோரிக்கையை ஏற்க முடியாது’ எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews