90 ஆயிரம் ஸ்டிக்கர்களால் உருவான தேசிய கொடி: மாணவர் கின்னஸ் முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 27, 2020

Comments:0

90 ஆயிரம் ஸ்டிக்கர்களால் உருவான தேசிய கொடி: மாணவர் கின்னஸ் முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருப்பூரில் 90 ஆயிரம் மூவர்ண ஸ்டிக்கர்களை கொண்டு 1745 சதுரடி தேசிய கொடியை வடிவமைத்து கல்லூரி மாணவர் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார். திருப்பூர் செரீப் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் கட்டிட துறை 4ம் ஆண்டு படித்து வருகிறார். படித்து வருகிறார். இந்நிலையில் இவர் 71 ஆவது குடியரசு தினத்தை ஒட்டி 1745 சதுரடி பரப்பளவு கொண்ட தேசிய கொடியை தயாரித்து கின்னஸ் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்திய நாட்டின் மூவர்ண தேசிய கொடியை 5க்கு 4.5 செ,மீ அளவு கொண்ட 90 ஆயிரம் மூர்வண ஸ்டிக்கர்களை பயன்படுத்தி தேசிய கொடியை வடிவமைத்துள்ளார்.
இந்த தேசிய கொடியின் நீளம் 18 மீட்டர், உயரம் 9 மீட்டர் ஆகும். மேலும் இந்த தேசிய கொடியின் மொத்த பரப்பளவு 1745 சதுரடி ஆகும். ஒரு மாணவரால் 70 மணி நேரத்தில் செய்யப்பட்ட இந்த பிரம்மாண்டமான தேசிய கொடியை பொதுமக்களின் பார்வைக்காக திருப்பூரில் கோவில் வழி அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைக்கப்பட்டது. இந்த 90 ஆயிரம் ஸ்டிக்கர்களால் கின்னஸ் சாதனைக்காக செய்யப்பட்ட பிரம்மாண்ட தேசிய கொடியை ஏராளாமான பொதுமக்கள், மாணவர்கள் பார்வையிட்டனர். இது குறித்து மாணவன் பிரவின் குமார் கூறுகையில், ‘‘கின்னஸ் சாதனைக்காக தேசிய கொடியை ஸ்டிக்கர்களை கொண்டு தயாரித்துள்ளேன். வழக்கறிஞர்கள் ஒருவரின் கையெழுத்தோடு கின்னஸிற்கு அனுப்பியுள்ளோம். இம்முயற்சி கின்னஸ் சாதனையில் தேர்வாகும் என்ற நம்பிக்கை உள்ளது,’’என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews