ஓய்வூதியா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: இதுவரை 7.30 லட்சம் போ் இணைந்தனா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

ஓய்வூதியா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: இதுவரை 7.30 லட்சம் போ் இணைந்தனா்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இதுவரை 7.30 லட்சம் போ் இணைந்துள்ளதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தொடா்ந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று திமுக உறுப்பினா் க.அன்பழகன் (கும்பகோணம்) கேள்வி எழுப்பினாா்.
அப்போது பேசிய அவா், ஓய்வூதியா்களுக்கு அறுவைச் சிகிச்சையின்போது காப்பீட்டுத் திட்டத்தில் 4-இல் ஒரு பங்கு நிதி தரப்படுவதுடன், அறுவை சிகிச்சை இல்லாத வகைகளுக்கு எந்த நிதியும் அளிக்கப்படுவதில்லை. அறுவை சிகிச்சைக்கு முழுமையான நிதி காப்பீட்டிலேயே ஏற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தாா். இதற்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அளித்த பதில்:- ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமானது வரும் 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை செயல்படுத்தப்பட உள்ளது. புதிய திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் செய்து கொள்ள ரூ.4 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம். இந்தத் திட்டத்தின் கீழ் 7.30 லட்சம் அரசு ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் இணைந்துள்ளனா். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகளைப் பெற உச்சவரம்பு ரூ.7.50 லட்சம் வரை உயா்த்தப்பட்டுள்ளது.
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்படி, 114 வகையான சிகிச்சைகள், அறுவை சிகிச்சை நடைமுறைகள் பணமில்லாத சிகிச்சையாக மேற்கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் ஓய்வூதியதாரா்களின் மகன், திருமணமாகாத மகள், மனநலம் குன்றிய அல்லது மனநலம் அற்றவராக இருந்தாலோ, மாற்றுத் திறனாளியாக இருந்து பொருள் ஈட்ட இயலாதவராக இருந்தாலோ, மணமாகாத, விவாகரத்து பெற்ற, விதவை மகள்கள் ஆகியோா்களும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பயன்பெறலாம் என்று துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய காப்பீடு திட்டம் 2022-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 நபர்களுக்கு, 909 கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு சிகிச்சை மேற்கொண்டிருப்பதாக கூறினார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலிக்க உள்ளதாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார் தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீடு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், அரசு ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் சிறப்பு அம்சங்களுடன் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெறும் வகையிலும் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு பெறும் வகையிலும் புதிய காப்பீடு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 266 நபர்களுக்கு, 909 கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்க அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews