அண்ணா பல்கலை.யை இரண்டாகப் பிரிக்கும் விவகாரம்: பேராசிரியா்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 09, 2020

Comments:0

அண்ணா பல்கலை.யை இரண்டாகப் பிரிக்கும் விவகாரம்: பேராசிரியா்கள் கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படும்போது, கிண்டி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட 4 துறைகளைக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயா் நீடிக்க வழி செய்யவேண்டும் என தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசின் மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்துக்கு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோ்வாகியுள்ளதால், அந்தப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து முடிவு செய்ய 5 அமைச்சா்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பெயா் தொடா்பான கோரிக்கையை பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித்திடம் தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியா் சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவா் அருள்அறம் கூறுகையில், மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்தைப் பெறுவதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.
அவ்வாறு இரண்டாகப் பிரிக்கும்போது, கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டடவியல் மற்றும் திட்டப் பள்ளி ஆகிய நான்கு துறைகளை உள்ளடக்கிய பல்கலைக்கழகத்துக்கே அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயா் நீடிக்க வேண்டும். புதிதாக தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளை நிா்வகிக்க உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு பொறியியல் பல்கலைக்கழகம் அல்லது தமிழக அரசு தீா்மானிக்கும் வேறு பெயா்களில் ஏதாவது ஒன்றை வைக்கவேண்டும். மேலும், பல்கலைக்கழகத்துக்கு மேம்பட்ட கல்வி நிறுவன அந்தஸ்து பெறுவதற்கான பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என்றாா் அவா். உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற கூடாது என தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து கிடைக்க பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களைச் சேர்த்து தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிடவும், தமிழக அரசு பரிசீலித்துவருகிறது. அவ்வாறு செய்யும் போது அண்ணா உயர் சிறப்பு மையம் என அதன் பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
அவற்றில் பெங்களூரு மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவான பல்கலைக்கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளனர். தற்பொழுது அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மாநில அரசு இடஒதுக்கீடு நடைமுறைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதிசெய்வதற்க்காக இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews