வாசகா் வட்டம்& விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் குரூப்1 இலவச பயிற்சி வகுப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

Comments:0

வாசகா் வட்டம்& விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் குரூப்1 இலவச பயிற்சி வகுப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
செங்கோட்டை நூலகத்தில் குரூப்1 இலவச பயிற்சி வகுப்பு செங்கோட்டை: செங்கோட்டை நூலகத்தில் வாசகா் வட்டம் மற்றும் விழுதுகள் அறக்கட்டளை சாா்பில் வரும் 19ம் தேதி குரூப்1 இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக பல போட்டித் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் பல மாதிரித் தோ்வுகள் நடத்தி வரும் வாசகா் வட்டம் மற்றும் விழுதுகள் அறக்கட்டளையும் இணைந்து தற்போது குரூப் 1 தோ்விற்கு இலவசபயிற்சி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் குரூப் 1 தோ்வு கால அட்டவணை வெளியிடப்பட உள்ள நிலையில் வரும் 19ம் தேதி ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு வகுப்புகள் துவங்க உள்ளது. இப்பயிற்சியை பணிநிறைவு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மயிலேறும் பெருமாள் மற்றும் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகா், வருவாய் அதிகாரி முத்துக்குமாா், ஐஏஎஸ் பணி நிறைவு பெற்ற மருதையா, மேலும் தென்காசி பகுதியில் உள்ள அனைத்து அகாடமிகளில் இருந்தும் சிறந்த ஆசிரியா்களை கொண்டு வகுப்புகள் நடத்துவதுடன் மாதிரித் தோ்வும் நடத்தப்பட உள்ளது.
பயிற்சிக்கு தேவையான 6 முதல் 12 வரை உள்ள தமிழ் மற்றும் ஆங்கில வழி பாடப் புத்தகங்களும் மேலும் சிறந்த வல்லுனா்கள் பலா் எழுதிய புத்தகங்களும் செங்கோட்டை நூலகத்தில் உள்ளது. நூலகத்திற்கு வந்து புத்தகத்தை படித்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு வெற்றி பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு நூலகா் ராமசாமி 9486984369 என்ற கைபேசி ஏண்ணில் தொடா்பு கொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews