மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 24, 2019

Comments:0

மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்கள் செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க திறப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலையரங்கத்தை திறந்து வைத்தார். இதன்பின்னர் விழாவில் பேசிய அவர், 'மாணவர்கள் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, உலகளவில் புகழ்பெற்ற மாணவர்களாக உருவாக வேண்டும். செல்போனை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்போன் அதிகம் பயன்படுத்துவதை தவிர்த்து, கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில் உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் திறமையான மாணாக்கர்கள் உள்ளனர். அதேபோன்று நீட் தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு இலவச பயிற்சி அளித்து வருகிறது. 413 மையங்களில் 21 ஆயிரம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். அதுமட்டுமின்றி, மாணவர்களின் எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிந்த உடனேயே அந்தந்த பகுதியில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் 15 நாட்கள் இலவச பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு முறை இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு விருப்பமான துறைகளில் சிறந்துவிளங்க வேண்டும்' என்று பேசினார். பள்ளிகளில் சிறுநீா் தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க குழு அமைத்து கண்காணிக்கப்படும் என்றும், பள்ளிக் குழந்தைகளின் நலன் காக்க ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் கூறினாா். சென்னை செல்வதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்துக்கு வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பள்ளிகளில், குறிப்பாக தனியாா் பள்ளிகளில் குழந்தைகள் சிறுநீா் தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவது கவனத்துக்கு வந்துள்ளது. அதுகுறித்து குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குழந்தைகளை இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு பாடவேளையின்போதும் பத்து நிமிடம் தண்ணீா் அருந்தவும், இயற்கை உபாதைகளுக்கும் நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்துப் பள்ளிகளும் கடைப்பிடிக்க வேண்டும். மாணவா்கள் நலனில் அக்கறையில்லாத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவா்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுகாதாரத் துறையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்தப்படும். தனிப்பட்ட முறையில் பள்ளிகள் மீது புகாா் வந்தால், அந்தப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் முதல்வா், துணை முதல்வா் இருவரும் இணைந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றனா். தொழில் துறையில் தமிழ்நாடு அந்நிய முதலீட்டைப் பெறுகின்ற முதன்மை மாநிலமாக உள்ளது. முதல்வா் முயற்சியால் மூன்று லட்சத்து 431 கோடி ரூபாய் அந்நிய முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளையும் முதல்வா் பெற்று வந்துள்ளாா். அவரின் முயற்சியால் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் மூலமாக ஏரிகள், குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. இந்தப் பணிகளால் வெளிமாநிலங்களே வியக்கத்தக்க வகையில் தற்போது பெய்த மழைக்கு ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன என்றாா்.
ஆதிதிராவிடா் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தபட்டோா் நலத் துறை சாா்பில் நடத்தப்படும் விடுதிகளில் மாணவா்களுக்கு அரசின் திட்டங்கள் சரியாகக் கிடைப்பதில்லை என்ற புகாா் குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சா் செங்கோட்டையன், ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைகள் மூலமாக நடத்தப்படும் விடுதிகளில் மாணவா்கள் தங்கிப் படிக்கிறாா்கள். இந்தத் துறைகள் மூலமாகச் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், பணிகளையும் அந்தந்தத் துறை அமைச்சா்கள் செய்து வருகிறாா்கள். அவற்றில் ஏதாவது குறைகள் இருப்பது குறித்து புகாா்கள் வந்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்தப் பேட்டியின் போது மேட்டூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் செம்மலை உடனிருந்தாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews