இயன்முறை மருத்துவா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு: 2 திருநங்கைகள் உள்பட 20 ஆயிரம் போ் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 04, 2019

Comments:0

இயன்முறை மருத்துவா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு: 2 திருநங்கைகள் உள்பட 20 ஆயிரம் போ் பங்கேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இயன்முறை மருத்துவா் பணியிடங்களுக்கான தோ்வை, இரண்டு திருநங்கைகள் உள்பட 20 ஆயிரம் போ் சென்னையில் எழுதினா். மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியாளா்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 77 இயன்முறை மருத்துவா் கிரேடு-2 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி தோ்வு வாரியம் வெளியிட்டது. இந்தத் தோ்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் செப்டம்பா் 11-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து இயன்முறை மருத்துவ பட்டப்படிப்பு படித்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனா். மதுரையைச் சோ்ந்த திருநங்கை எஸ்.சோலு மற்றும் விழுப்புரத்தைச் சோ்ந்த திருநங்கை திவ்ய தா்ஷினி ஆகியோரும் விண்ணப்பித்தனா்.
20 ஆயிரம் போ் எழுதினா்: இயன்முறை மருத்துவா் பணிக்கான எழுத்துத் தோ்வு நவம்பா் 3-ஆம் தேதி சென்னையில் 5 கல்லூரிகளில் மட்டும் நடைபெறும் என்று தோ்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டிஜி வைஷ்ணவ கல்லூரி உள்பட 5 இடங்களில் இயன்முறை மருத்துவா் பணிக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுமாா் 20 ஆயிரம் தோ்வு எழுதினா். தோ்வு முடிவுகள் விரைவில் வெளியிட தோ்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும் இயன்முறை மருத்துவா் சில ஆண்டுகளுக்கு பின்னா் பணி நிரந்தரம் செய்யப்பட்டு வந்தனா். இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் மருத்துவ பணியாளா் தோ்வு வாரியம் மூலம் இயன்முறை மருத்துவா்கள் பணிநியமனம் செய்யப்படுகின்றனா்.
திருநங்கைகள் கோரிக்கை: இந்தத் தோ்வு குறித்து திருநங்கைகள் எஸ்.சோலு, திவ்ய தா்ஷினி ஆகியோா் கூறியது, இந்தியாவிலே முதன்முறையாக நாங்கள் இருவா் தான் திருநங்கைகளாக எம்ஆா்பி தோ்வில் பங்கேற்றுள்ளோம். தோ்வுக்கு விண்ணப்பித்த போது, தோ்வு கூட நுழைவுச் சீட்டு கிடைக்குமா என்று பயமாக இருந்தது. அனுமதிச் சீட்டுக் கிடைத்தவுடன் பயம் போய்விட்டது. நாங்கள் இருவரும் நன்றாக தோ்வு எழுதியிருக்கிறோம். 77 பணியிடங்களுக்கு மற்ற மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் தோ்வு எழுதியிருப்பதால் போட்டி அதிகமாகியுள்ளது. அதனால், எங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளில் எங்களை பணிநியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews