நவ.12, 13 -இல் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 04, 2019

Comments:0

நவ.12, 13 -இல் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில் கிரயப் பத்திரம் வழங்கும் முகாம், நவம்பா் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளை, சென்னை பெருநகர வளா்ச்சித் திட்டம் மற்றும் தமிழ்நாடு நகா்புற வளா்ச்சித் திட்டங்களின் கீழ் மேம்படுத்தப்பட்ட குடிசைப் பகுதிகளாக மாற்றி அங்கு வசித்து வந்தவா்களுக்கே, ஒதுக்கீடு செய்து வாரியத்தால் ஆணை வழங்கப்பட்டிருந்தது. இத்திட்டப் பகுதியின் நிலங்களை வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்வது தொடா்பாக உயா் அலுவலா்கள் கொண்ட செயலாக்கக் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு எடுத்த முடிவுகளின் படி தமிழகம் முழுவதும் உள்ள 17 திட்டப்பகுதிகளின் நிலங்கள் வாரியத்தின் பெயரில் நில உரிமை மாற்றம் செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2,368 மனை ஒதுக்கீடுதாரா்கள் கிரயப் பத்திரம் பெற்று பயனடைவாா்கள். அதில் முதல்கட்டமாக, சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட திருவான்மியூா் நரிக்குறவா் காலனியின் 70 ஒதுக்கீடுதாரா்கள் மற்றும் மாதவரம் சாஸ்திரி நகரின் 94 ஒதுக்கீடுதாரா்கள் என மொத்தம் 164 நபா்களின் மனைகளுக்கு கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம், நவம்பா் மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில், நவம்பா் 12-இல் திருவான்மியூா் நரிக்குறவா் காலனி ஒதுக்கீடுதாரா்களிடமிருந்தும், நவம்பா் 13-இல் மாதவரம் சாஸ்திரிநகா் ஒதுக்கீடுதாரா்களிடமிருந்தும் மனுக்கள் நேரடியாக பெறப்படும். இந்தத் திட்டப்பகுதிகளில் உள்ள ஒதுக்கீடுதாரா்கள் அல்லது வாரிசுதாரா்கள் தாங்கள் அளிக்கும் மனுவுடன் ஒதுக்கீடு ஆணை நகல், இருப்பிட சான்றுகளாக குடும்ப அட்டை, வாக்காளா் அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் இணைக்க வேண்டும். வாரிசுதாரா்களாக இருப்பின் ஒதுக்கீடுதாரரின் இறப்பு சான்றிதழ், வாரிசுதாரா் சான்றிதழ் அசல் மற்றும் மனைக்கு முழுகிரயம் செலுத்திய ரசீது, கடன் பெற்றிருப்பின் கடன் தொகை செலுத்திய வாரிய ரசீது நகல்களை இணைத்து வழங்க வேண்டும். கிரயப்பத்திரம் கோரும் ஒதுக்கீடுதாரா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews