பட்டப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு: தலைவர்கள் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 24, 2019

Comments:0

பட்டப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு: தலைவர்கள் கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து வகையான பட்டப்படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வைகோ (மதிமுக): புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட இருப்பதாகவும், அதில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கான பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏழை மற்றும் பட்டியலின மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் பட்டம் பெறுவதை இது தடுத்துவிடும். மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து, அனைத்தையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் இந்த முயற்சி எதிர்விளைவுகளை உருவாக்கும். இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பட்டப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், பெரும் பகுதி மக்களின் கல்வி உரிமையினை பறித்து விட மத்திய அரசு முயற்சிக்கிறது. ஏற்கெனவே 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 என பல கட்டங்களில் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் அடித்தட்டு, உழைக்கும் மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. கல்வியின் தரத்தையும், திறனையும் உயர்த்திட நீட் போன்ற தேர்வுகள் பயனளிக்கவில்லை என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது.
நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி பயிற்சி மையங்கள் புற்றீசல்களாகப் பெருகி, கட்டணம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை பறித்து வருகின்றன. எனவே, மத்திய அரசின் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. நீட் உள்பட அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே பாமக இதை கடுமையாக எதிர்த்தது. தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு ஒரே நுழைவுத்தேர்வு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும். நுழைவுத்தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுதான் உதாரணம். ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, நீட் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு 10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்டது தான் மிச்சமாகும். இப்போதும் அதேபோன்று புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத்தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews