நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை: சிபிசிஐடிக்கு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 25, 2019

Comments:0

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவ மாணவர் சேர்க்கை: சிபிசிஐடிக்கு உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் மருத்துவ மாணவர்களின் விரல்ரேகைப் பதிவுகளை சிபிசிஐடி போலீஸார் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தீரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. எஞ்சிய 207 இடங்களை அந்தந்த மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களிடம் தமிழக அரசு ஒப்படைத்து விட்டது. எனவே, இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியான நபர்களைக் கொண்டு இடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள 4,250 மாணவர்களின் விரல்ரேகை உள்ளிட்ட பதிவுகளை தேசிய தேர்வு முகமை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் எத்தனை பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் விரல்ரேகைப் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை மாநில மருத்துவத் தேர்வு குழுவிடம் வழங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த விரல்ரேகைப் பதிவுகளையும், மருத்துவக் கல்லூரிகளில் தற்போது சேர்ந்துள்ள 4,250 மாணவர்களின் விரல் ரேகைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அதே நேரம், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ள மாணவர்களின் விரல்ரேகை குறித்த விவரங்கள் எதுவும் இல்லை. எனவே, தமிழகத்தில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மாநிலத் தேர்வுக் குழுவும், சிபிசிஐடி போலீஸாரும் நேரடியாகச் சென்று அங்கு சேர்க்கைப் பெற்றுள்ள மாணவர்களின் விரல்ரேகைகளைப் பதிவு செய்ய வேண்டும். இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். விரல்ரேகைப் பதிவுகளை ஆய்வு செய்யும் நிபுணர்களை மாநில தடய அறிவியல் இயக்குநர்தான் நியமிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் தடய அறிவியல் இயக்குநரையும் எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்க்கிறோம். மேலும், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் விரல்ரேகைப் பதிவுகள் விண்ணப்பங்களில் பெறப்பட்டதா அல்லது பயோ மெட்ரிக் முறையில் பெறப்பட்டதா என்பது உள்ளிட்ட விவரங்களை வெள்ளிக்கிழமை (அக்.25) தேசிய தேர்வு முகமை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews