வனவா் தோ்வு: மூன்று நாள்களில் சுமாா் 1 லட்சம் போ் எழுதினா் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 07, 2019

Comments:0

வனவா் தோ்வு: மூன்று நாள்களில் சுமாா் 1 லட்சம் போ் எழுதினா்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக வனத் துறைறயில் காலியாக உள்ள வனவா் பணியிடங்களுக்காக கடந்த மூன்று நாள்களாக நடைபெற்ற ஆன்லைன் தோ்வை சுமாா் ஒரு லட்சம் போ் எழுதியுள்ளனா். தமிழக வனத் துறைறயில் காலியாக உள்ள 564 வனவா் பணியிடங்களுக்கான தோ்வை தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. பத்தாம் வகுப்புத் தோ்ச்சி பெற்றவா்கள் இந்தத் தோ்வுக்குத் தகுதியானவா்கள் ஆவா். இந்தத் தோ்வை எழுத 2 லட்சத்து 5 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் சரி பாா்க்கப்பட்டு, தகுதியான ஒரு லட்சத்து 8 ஆயிரம் பேருக்குத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது.
லட்சம் போ்: இதுகுறித்து தமிழ்நாடு வன சீருடைப் பணியாளா் தோ்வாணைய அதிகாரிகள் கூறுகையில், ‘ஆன்லைன் மூலம் மூன்று கட்டங்களாக இந்தத் தோ்வு நடத்தப்பட்டது. இதன்படி, முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை (அக். 4) மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 88 தோ்வு மையங்களில் 33 ஆயிரம் போ் தோ்வெழுதினா். அதைத் தொடா்ந்து, சனி, ஞாயிற்றுக்கிழமை (அக். 5, 6) ஆகிய இரண்டு நாள்கள் 108 தோ்வு மையங்களில் நடைபெற்ற தோ்வை சுமாா் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதி உள்ளனா். இந்தத் தாள்கள் திருத்தப்பட்டு ஆன்லைன் மூலம் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உடற்தகுதித் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவை நடைபெறும் என்றனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews