தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

தாகூர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தாகூர் கலை அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கையில் ஏற்பட்ட குளறுபடிகள் சரி செய்து, நேற்று பாட வாரியாக 17 துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.புதுச்சேரி அரசு கலை அறிவியல் கல்லுாரிகளுக்கு, பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்வானவர்களின் பட்டியலை சென்டாக் கடந்த 13ம் தேதி வெளியிட்டது. கடந்த 15 மற்றும் 16ம் தேதி விடுமுறை, 17 மற்றும் 18ம் தேதி சனி, ஞாயிற்று கிழமைகளில் கல்லுாரிகளில் சேர்க்கை நடத்த வேண்டும் என சென்டாக் அறிவித்தது. ஆனால், லாஸ்பேட்டை தாகூர் கலை கல்லுாரியில் மாணவர் சேர்கைக்கு பதிலாக, சேர்க்கைக்கு வந்த மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் டோக்கனை வழங்கி, 19ம் தேதி வருமாறு அனுப்பி வைத்தது.கல்லுாரியில் மொத்தமுள்ள 1386 இடங்களுக்கு தேர்வான மாணவர்கள் நேற்று முன்தினம் ஒரே நாளில் கல்லுாரியில் குவிந்தனர். சேர்க்கை அதிகாரிகளை சூழ்ந்த கொண்டு மாணவர்கள், சான்றிதழ்களை நீட்டியதால், சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டு சென்றனர். இதனால், மாணவர்களும் பெற்றோர்களும் சிரமத்திற்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் மாணவர் சேர்க்கை துவங்கியது.அப்போது, ஒரே இடத்தில் நடந்த மாணவர் சேர்க்கை பரவலாக பிரிக்கப்பட்டது. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி. இயற்பியல் என துறை வாரியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. 17 துறைகளிலும் மாணவர் சேர்க்கை நடந்தது. ஒவ்வொரு துறைகளிலும், கல்லுாரி கட்டணம் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததால், நேற்று எவ்வித குழப்பமின்றி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews