👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆஸ்திரேலிய நாட்டு சிறப்புப் பிரதிநிதிகள் குழுவினருடனான நட்பு சார்ந்த கிரிக்கெட் போட்டி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில், இந்தியா சார்பில் விளையாடிய அணிக்கு மாநில அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமைப் பொறுப்பு வகித்தார்.
போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இந்தப் போட்டி நடத்தப்பட்டது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அந்நாட்டின் ப்ளாக்டவுன் நகர மேயர் ஸ்டீபன் பாலி செயல்பட்டார். முன்னாள் நியூ சவுத் வேல்ஸ் பிரதமர் நாதன் ரீஸ், ஆஸ்திரேலிய துணை தூதரக அதிகாரிகள், வர்த்தக நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்திய அணியில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், ஸ்ரீ ராமச்சந்திரா, பாலிஹோஸ், நெட்மெட்ஸ், ராம்கோ, லிங்க் லாஜிஸ்டிக்ஸ், வேல்ஸ் மற்றும் விஐடி கல்வி நிறுவனங்கள், சத்யஜோதி பிலிம்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர். மொத்தம் 10 ஓவர்கள் நடைபெற்ற அப்போட்டி சமனில் நிறைவடைந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U