Breaking

Friday, April 24, 2026

மதிய உணவிற்காகச் வாக்குச்சாவடியை விட்டுச் சென்ற தேர்தல் பணியாளர்கள் இடைநீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி



மதிய உணவிற்காகச் வாக்குச்சாவடியை விட்டுச் சென்ற தேர்தல் பணியாளர்கள் இடைநீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி

வாக்குப் பதிவின் போதே, வாக்குச்சாவடியை அப்படியே விட்டுச் சென்ற தேர்தல் பணியாளர்களால் அதிர்ச்சி!

மேற்கு வங்காளத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற்ற முதற்கட்ட வாக்குப் பதிவின் போது, வாக்குச்சாவடியை அப்படியே விட்டுவிட்டுத் தேர்தல் பணியாளர்கள் மதிய உணவிற்காகச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதிய உணவுக்காக, வாக்குச்சாவடியில் இருந்த அனைத்து தேர்தல் பணியாளர்களும் ஒரே நேரத்தில் வாக்குச்சாவடியை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஆவணங்கள் ஆளற்ற நிலையில் விடப்பட்டன. நடவடிக்கை: இச்செயலில் ஈடுபட்ட தலைமை அதிகாரி உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணியாளர்களையும், தேர்தல் ஆணையம் அதிரடியாக இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அலட்சியம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மாற்று தேர்தல் குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டு, வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் பணியின் போது, வாக்குச்சாவடியில் பணியாளர்கள் கவனக்குறைவாகச் செயல்பட்டதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog