👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊனையூர் அரசுப் பள்ளியில் "புத்தகமில்லா பொழுது' என்ற தலைப்பில் கிராமப்புற விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் சை. சற்குணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்கத்திற்கு மாறாக புத்தகங்கள் ஏதும் எடுத்து வராமல் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்திருந்தனர்.
அப்போது, பாரம்பரியமாக கிராமப்பகுதியில் விளையாடக் கூடிய தாயம், கில்லி, பம்பரம், கோலி, பல்லாங்குழி, கல்லாங்காய், டயர் வண்டி முதலிய உபகரணங்கள் எடுத்து வந்து விளையாடினர். விழாவில் திருச்சி காவல்துறையைச் சேர்ந்த உலக சாதனையாளர் இரா. அரவிந்த் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு தற்காப்பு கலைகளை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவ, மாணவிகளுக்கு அடிப்படைக் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் இணைப்பு பயிற்சி அளித்து வரும் பொறியாளர் சர்மிளா வேலுச்சாமிக்கு, பள்ளியின் சார்பில் வழங்கப்பட்ட "கல்வி காவலர்' விருதினை, சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட திருச்சி "எய்ம் டூ ஹை' தொண்டு நிறுவன நிறுவனர் இரா.மோகன் வழங்கினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U