👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வரும் 28 ம் தேதி, வானியல் காட்சி நிகழ்வு நடக்கிறது.இதுகுறித்து புதுச்சேரி அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை, புதுச்சேரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாமன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் பொது மக்களுக்கு வானியல் பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில், ஒவ்வொரு மாதமும் வானியல் காட்சியை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் 28ம் தேதி, மாலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப்பள்ளியில், வானியல் காட்சி நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.இந்த வானியல் காட்சி நிகழ்வில், பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லுாரி இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் விளக்கம் அளிக்க உள்ளார்.மேலும், தொலைநோக்கி வழியாக அந்த நேரத்தில் வானில் தெரியும் கோள்கள், விண் மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டத்தினை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு காண்பிக்கப்படும்.ஆகஸ்ட் 2019 மாத வானியல் வரைபடம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். தெளிவான வானம் பொறுத்தமட்டில், இந்த நிகழ்ச்சியினை லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U