👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சாவடி பாளையத்தை சேர்ந்த, பாலசுந்தர்ராஜ், 23, என்பவர், சென்னையில் உள்ள, மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், 2006 - 2011ல், எம்.பி.பி.எஸ்., படித்தேன். படிப்பு முடித்து, மருத்துவ பயிற்சிக்கு செல்ல வேண்டிய நிலையில், பெற்றோருக்கு உடல் நலம் பாதித்தது. இருவரையும், வேலுாரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து, உடனிருந்து கவனிக்க வேண்டியிருந்தது.இதனால், குலசேகரத்தில் மருத்துவ பயிற்சியை தொடர முடியவில்லை. வேலுார் மருத்துவ கல்லுாரியில், மருத்துவ பயிற்சியை தொடரும் வகையில், இடமாற்றம் கோரினேன்; கல்லுாரி நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதனால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.வேலுார் மருத்துவ கல்லுாரியில் பயிற்சி பெற, கல்லுாரி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தடையில்லா சான்று தர, கல்லுாரி நிர்வாகம் தாமதம் செய்ததால், மன உளைச்சலுக்கு ஆளானேன்; எதிர்காலம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. உரிய சேவை வழங்காத மருத்துவக் கல்லுாரி நிர்வாகம், 30 லட்சம் ரூபாய் இழப்பீடும், மன உளைச்சலுக்கு, இரண்டு லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.கடந்த, 2014ல் இந்த வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், &'மாணவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்&' என, மருத்துவக் கல்லுாரி நிர்வாகம் வலியுறுத்தியது.இந்த வழக்கில், நீதிபதி தமிழ்வாணன், நீதித்துறை உறுப்பினர்கள், பாஸ்கரன், லதாமகேஷ்வரி ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். &'கல்லுாரி சேவையில் குறைபாடு உள்ளது. மாணவருக்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு மற்றும், 10 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்&' என, உத்தரவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U