பள்ளி மாணவியரை மிரட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

பள்ளி மாணவியரை மிரட்டிய ஓட்டுனர், நடத்துனர் 'சஸ்பெண்ட்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பஸ் நிறுத்தத்தில், பள்ளி மாணவியரை இறக்கி விடாமல் தவிக்க விட்ட, அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, 'சஸ்பெண்ட்' செய்து, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவியர், ஐந்து பேருடன், ஆசிரியை ஒருவர், 8ம் தேதி, பள்ளி முடிந்து, தாராபுரத்தில் இருந்து, மங்களாம்பாளையத்திற்கு, அரசு பஸ்சில் பயணித்துள்ளனர். ஈரோட்டில் இருந்து, பழநிக்கு இயக்கப்படும் பஸ்சில், ஆறு பேரும், மங்களாம்பாளையத்திற்கு, டிக்கெட் எடுத்து உள்ளனர். ஆனால், குறிப்பிட்ட நிறுத்தத்தில், பஸ் நிற்கவில்லை. அடுத்ததாக, 3 கி.மீ., துாரத்தில், தேர்ப்பட்டி பிரிவில் நின்றது.
இது குறித்து ஆசிரியையும், மாணவியரும், 'மங்களாம் பாளையத்தில் நிற்காமல், தேர்ப்பட்டியில் இறக்கிவிட்டதால், இரவு நேரத்தில், எப்படி ஊருக்கு செல்ல முடியும்' எனக் கூறி உள்ளனர். இதையடுத்து, அவர்களை மிரட்டிய, ஓட்டுனரும், நடத்துனரும், பஸ்சை பழநிக்கு ஓட்டிச் சென்றனர். பேருந்தில் இருந்த மாணவியர் அழுதனர். பழநியில் இருந்து ஈரோடுக்கு திரும்பிய, அதே பஸ்சில், இரவு, 8:00 மணிக்கு, மங்களாம்பாளையத்தில், மாணவியரை இறக்கி விட்டுள்ளனர். பஸ்சை சிறைப்பிடித்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். புகாரின்படி, அரசு பஸ் ஓட்டுனர், சையது அபுதாகீர், நடத்துனர், ராம்நாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தாராபுரம், சப் - கலெக்டர் பவன்குமார், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தாராபுரம் கிளை போக்குவரத்து கழக மேலாளர், இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews