'தலைமையாசிரியரிடம் இருந்து அரசு பள்ளியை காப்பாற்றுங்கள்' - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 11, 2019

'தலைமையாசிரியரிடம் இருந்து அரசு பள்ளியை காப்பாற்றுங்கள்'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாகை அருகே, அரசு பள்ளி தலைமை ஆசிரியரை, பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம், கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். நாகை மாவட்டம், திருக்குவளை அடுத்த, திருவாசல் கிராமத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று, நாகை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, குண சேகரனை சந்தித்து, புகார் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தையல்லை என்ற தலைமையாசிரியை பணியில் சேர்ந்தார்.
இவர், பணியில் சேர்ந்ததில் இருந்து, பள்ளியின் உபகரணங்கள் மாயமாகி விடுகிறது. பள்ளி சுற்றுசுவர் கட்டுமான பணியிலும், மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் பணியில் சேர்வதற்கு முன், மாணவ -மாணவியர், 170 பேர் பயின்று வந்தனர். அவரின் நடவடிக்கையால், தேர்ச்சி சதவீதம் குறைந்து, தற்போது, 98 பேர் மட்டுமே படிக்கின்றனர். தலைமையாசிரியை, பள்ளிக்கு வருவதே இல்லை. இது குறித்து, இதற்கு முன், சி.இ.ஓ., பொறுப்பில் இருந்தவரிடம், பல முறை நேரில் புகார் அளித்தோம். அவர், மூன்று முறை, நேரடியாக, பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போதும், தலைமையாசிரியை இல்லாததால், திரும்பி சென்று விட்டார். எனவே, தலைமையாசிரியை பணியிட மாறுதல் செய்வதோடு, அவர் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. 'விசாரணை நடத்தி, புகார் உண்மையாக இருந்தால், ஒரு மாதத்திற்குள், தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, சி.இ.ஓ., உறுதியளித்ததை அடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews