பேஸ்புக் பயன்படுத்தாமல் இருந்ததால் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் முதலிடம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

பேஸ்புக் பயன்படுத்தாமல் இருந்ததால் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் முதலிடம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. இரண்டு ஆண்டுகளாக பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்தியதால் ஜேஇஇ தேர்வில் முதலிடம் பெற முடிந்ததாக மாணவர் கார்த்திகே குப்தா கூறியுள்ளார். மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. மெயின் தேர்வு, ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. இத்தேர்வில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த கார்த்திகே குப்தா என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஹிமான்ஷு கௌரவ் சிங் மற்றும் அர்சித் பப்னா ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளனர். கார்த்திகே 372க்கு 346 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். மும்பையில் வைல் பார்லே பகுதியில் இருக்கும் ஆல்பா ஜூனியர் கல்லூரியில் படித்த இவர் 93.69 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
ஜேஇஇ மெயின் தேர்வு முடிவில் 18வது இடத்தை பிடித்த இவர் ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் முதலிடத்துக்கு முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்குத் தயாரித்தது குறித்து அவர் கூறுகையில், “நான் ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லை, பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை இரண்டு ஆண்டுகளாக பார்க்கவே இல்லை.” என்கிறார். மகாராஷ்டாராவின் சந்திராபூர் மாவட்டத்தில் பல்லார்பூரைச சேர்ந்தவர் கார்த்திகே. தற்போது மும்பையில் வசிக்கிறார். இயற்பியல்தான் தனக்குப் பிடித்த பாடம் எனவும் ஐஐடி மும்பையில் படிப்பைத் தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார். கார்த்திகேவின் அப்பா சந்திரேஷ் பல்லார்பூர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பொது மேலாளராக உள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews