நகராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

நகராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெல்லிக்குப்பம்:திருக்கண்டேஸ்வரம் நகராட்சி பள்ளிக்கு, முன்னாள் மாணவர்களும், சகோதரர்களுமான நான்கு பேர் இணைந்து, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கொடுத்துள்ளதை, பொது மக்கள் பாராட்டி வருகின்றனர். கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம், திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில், 400க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். போதிய கட்டட வசதியின்றி, மாணவர்கள் சிரமம் அடைந்தனர்.அதேபகுதியைச் சேர்ந்த, இப்பள்ளியின் முன்னாள் மாணவர், ராஜேந்திரன், சென்னை, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர். தாங்கள் படித்த பள்ளிக்கு, போதிய கட்டடவசதியில்லாததை அறிந்த அவர், அதே பள்ளியில் படித்த, அவரது சகோதரர்கள், மூவருடன் சேர்ந்து, புதிய கட்டடம் கட்டித் தர முடிவுசெய்தார்.இதற்காக கல்வித் துறையிடம் முறையாக அனுமதி பெற்று, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகள் உடைய, கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார்.தற்போது, புதிய கட்டடத்தில் உள்ள வகுப்பறைகளில், மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தங்களை உயர்த்திய பள்ளியை, மறவாமல், நன்றி கடன் செய்த சகோதரர்களை, கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews