சிற்பக்கலை பயில மாணவர்கள் ஆர்வம் - ஜூன் வரை விண்ணப்பிக்கலாம்.! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

சிற்பக்கலை பயில மாணவர்கள் ஆர்வம் - ஜூன் வரை விண்ணப்பிக்கலாம்.!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழக மாணவர்களிடையே, சிற்பக்கலை பயிலும் ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழக கலை பண்பாட்டுத் துறையின் கீழ், சென்னை மற்றும் மாமல்லபுரத்தில், கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு, பி.டெக்.,கில், மரபுக் கட்டடக்கலை; பி.எப்.ஏ.,யில், கல், சுதை, மரம், உலோகம் உள்ளிட்ட சிற்பக்கலை மற்றும் கவின்கலை மரபு ஓவியம் போன்ற, பட்டப்படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகளுக்கு, தற்போது விண்ணப்ப வினியோகம் துவங்கி உள்ளது.
அறிவிப்பு வெளியிடப்பட்ட, நான்கு நாட்களுக்குள், நுாற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது குறித்து, கலைபண்பாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது : தற்போது, சிவில் உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளுக்குப் பின், வேலைவாய்ப்பு இல்லாததால், பாரம்பரிய கட்டடம், சிற்பம், ஓவியம் உள்ளிட்ட கலைப்படிப்புகளில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படிப்புகளுக்கு கட்டணம் குறைவு. தனித்திறன், கலைத்திறன் உள்ளவர்களுக்கு, படித்தவுடன் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும்; சுயவேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ள முடியும்.இந்த படிப்புகளில் சேர, ஜூன் வரை விண்ணப்பிக்கலாம். சிற்பக் கல்லுாரியை, 044 - 2744 2261 என்ற, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews