மருத்துவத்துக்கு பின் வேளாண் கவுன்சிலிங்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

மருத்துவத்துக்கு பின் வேளாண் கவுன்சிலிங்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசின் வழிகாட்டுதல் படியும், மாணவர்கள் நலன் கருதியும், மருத்துவ கலந்தாய்வுக்கு பின், வேளாண் படிப்பு கலந்தாய்வு நடத்தப்படும், என, பல்கலை, டீன் கல்யாணசுந்தரம் தெரிவித்தார். வேளாண் படிப்புகளுக்கு, வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, &'ஆன்லைன்&' பதிவு, இன்று துவங்குகிறது. http://www.tnau.ac.in/ugadmission.html இணையதளம் வாயிலாக, விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளலாம்; ஜூன் 7 வரை, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தர வரிசை பட்டியல்தொடர்ந்து, 10 முதல், 12ம் தேதி வரை, பிழைகள் திருத்த வாய்ப்பளிக்கப்படும். சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ஜூன், 11 முதல், 13ம் தேதி வரை நடக்கவுள்ளன.
விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், ஜூன், 20ல் வெளியிடப்பட உள்ளது.கடந்த ஆண்டுகளில், வேளாண் பல்கலை மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு, மருத்துவ கலந்தாய்வுக்கு முன் நடத்தி முடிக்கப்படும்.வரும் கல்வியாண்டில், மருத்துவ கலந்தாய்வு முடிந்த பின், இக்கலந்தாய்வை துவக்க, பல்கலை திட்டமிட்டுள்ளது. பல்கலை, &'டீன்&' கல்யாணசுந்தரம் கூறியதாவது:விண்ணப்பப் பதிவில் சிரமம் இருப்பின், உதவி மையங்களை அணுகலாம். மாநிலத்தில் செயல்படும், 40 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 14 வேளாண் அறிவியல் மையங்கள், 14 உறுப்பு கல்லுாரிகள், 27 இணைப்பு கல்லுாரிகள் அனைத்திலும், உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவையற்ற செலவுஆண்டுதோறும், வேளாண் கலந்தாய்வில் இடங்களை பெறும் பல மாணவர்கள், மருத்துவம், பொறியியல் போன்ற பிற படிப்புகளுக்கு மாறிச்செல்லும் எண்ணிக்கை, அதிகளவில் உள்ளது.இதனால், பல்கலைக்கு தேவையற்ற பணிச்சுமை ஏற்படுவதுடன், மாணவர்களுக்கும் தேவையற்ற செலவுகள் அதிகமாகின்றன. இதனால், மாணவர்கள் நலன் கருதி, மருத்துவ கலந்தாய்வுக்கு பின், வேளாண் கலந்தாய்வை நடத்த, அரசு வழிகாட்டுதலின் படி திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
தற்காலிக ரத்துகடந்தாண்டு வரை, வேளாண் பல்கலையின் கீழ், 12 படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 2019- -- 20ம் கல்வியாண்டு அறிவிப்பு பட்டியலில், 10 பாடப் பிரிவுகள் மட்டுமே, இடம் பெற்றுள்ளன. இதன்படி, பி.டெக்., உயிர் தகவலியல், பி.டெக்., வேளாண் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு படிப்புகளில், மாணவர் சேர்க்கை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. &'டீன்&' கல்யாணசுந்தரம் கூறுகையில், &'&'இரு படிப்புகள், நிரந்தரமாக ரத்து செய்யப்படவில்லை. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமமான, ஐ.சி.ஏ.ஆர்., அறிவுறுத்தலின் படி, இப்படிப்புகளின் பெயர், பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. &'&'மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் வகையில், பாடத்திட்டம் மேம்படுத்தப்படும். இதற்கு, ஓராண்டு அவகாசம் தேவை என்பதால், மாணவர்கள் சேர்க்கை, தற்காலிகமாக, இந்தாண்டு மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,&'&' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews