தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் பயிற்சி முகாம்களில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

தேர்தல் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் பயிற்சி முகாம்களில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள், இன்று முதல் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படுகின்றது. இன்று முதற்கட்டமாக நடைபெறும் பயிற்சி வகுப்புகள் காலையில் தொடங்கி, மாலை வரை நடைபெறுகிறது. வாக்குச்சாவடிகளில் உள்ள நடைமுறை, பணியாற்றும் விதம், வாக்கு இயந்திரங்களை கையாளுதல் உள்ளிட்ட வாக்குச்சாவடி பணிகளுக்கான பயிற்சி வழங்கப்படும். பதட்டமான வாக்குச்சாவடிகளை கையாளுதல் குறித்த பயிற்சியும் வழங்கப்படவுள்ளது.
சென்னை: சென்னையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பில் 11 ஆயிரத்து 160 பேர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட 8 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
கோயம்புத்தூர்: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 72 வாக்குச்சாவடிகளில் பணியாற்ற கூடிய, 14 ஆயிரத்து 746 தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம், காலையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நிர்மலா கல்லூரி வளாகத்தில் பயிற்சி முகாமினை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தொடங்கி வைத்தார்.
சேலம்: சேலம் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல் பணியில், 15 ஆயிரத்து, 836 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு, முதல்கட்ட பயிற்சி வகுப்பு இன்று காலை தொடங்கியது. சேலம் அஸ்தம்பட்டி, கெங்கவல்லி, மின்னாம்பள்ளி, சின்ன சீரகாபாடி, ஆத்தூர், சங்ககிரி, சின்னத்திருப்பதி உள்ளிட்ட இடங்களில் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
நாமக்கல்: இதேபோல், நாமக்கல் மக்களவைத் தொகுதியில், வாக்குச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற உள்ள 7 ஆயிரத்து 917, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில், தேர்தல் பணியாற்ற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மதுரை தொகுதியில் மட்டும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைவதற்கு 48 மணி நேரம் முன் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மிகவும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து சென்ற ரூ.20 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதில் தனியார் சுவர்களில் மட்டும் 1.5 லட்சம் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 875 வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு அன்று 3.45 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுகிறார்கள். 7,316 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் முன்னெடுக்கப்படுகின்றது. இவர்களுக்கு முதல்கட்ட பயிற்சி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் தொடர்ந்து வரும் நாட்களில் 2ம் கட்ட, 3ம் கட்ட பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளது. சென்னையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பில் 11 ஆயிரத்து 160 பேர் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில், திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தியாகராயநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி உள்ளிட்ட 8 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews