காமராஜ் பல்கலையில் 180 பேர் தடாலடி மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 05, 2019

காமராஜ் பல்கலையில் 180 பேர் தடாலடி மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மதுரை காமராஜ் பல்கலையில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கியவர்கள் குறித்து துறைரீதியாக விசாரணை நடத்திய துணைவேந்தர் கிருஷ்ணன், ஒரே நாளில் 180க்கும் மேற்பட்டோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். இப்பல்கலையில் மாஜி துணைவேந்தர் செல்லத்துரை ஆதரவாளர்கள் முக்கிய பதவிகளில் உள்ளனர். தொலைநிலை கல்வி, ஆராய்ச்சித் துறை, உறுப்பு கல்லுாரிகளில் முறைகேடு மற்றும் விதிமீறல்கள் நடப்பதாக புகார் எழுந்தன.இதுதொடர்பாக ஜன.,29 தினமலர் நாளிதழில் கட்டுரை வெளியானது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விசாரணை குழுக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் பல துறைகளில் துணை பதிவாளர், கண்காணிப்பாளர் முதல் கடைநிலை உதவியாளர், தற்காலிக மற்றும் தொகுப்பூதிய பணியாளர் வரை 180க்கும் மேற்பட்டோரை ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து துணைவேந்தர் உத்தரவிட்டார்.இதில், தொலைநிலை கல்வித் திட்டத்தில் ஊழியர்கள் கூண்டோடு மாற்றப்பட்டனர். துணைவேந்தரின் இந்த தடாலடி மாற்றம் வரவேற்பை பெற்றுள்ளது.தண்டனையும் தேவை அதேநேரம், வெறும் இடமாற்றம் மட்டும் தீர்வாகாது. ஒரு மேஜையில் இருந்து மற்றொரு மேஜைக்கோ, ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கோ அனுப்புவது தண்டனை ஆகாது. தவறுக்கு உரிய தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்கள் கருத்து.பட்டங்கள் வழங்குவதில் தாமதம்2017ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது. 2017 ம் ஆண்டு வரை எத்தனை டிகிரி, டிப்ளமோ சான்றிதழ்கள், மாணவர் உரிய கட்டணம் செலுத்திய பின்னரும் வழங்கப்படாமல் உள்ளன. 2012, 2013 ல் படிப்பை முடித்த சிலருக்கு கூட இன்னும் சான்றிதழ்கள் கிடைக்கவில்லை.இதுகுறித்து ஒரு தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உடன் பட்டம் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான செலவை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வசூலிக்க வேண்டும். இதுவே அவர்களுக்கான தண்டைனயாக இருக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர் கருதுகின்றனர்.பதவி நீக்கம் செய்த பின் விசாரணைதொலைநிலைக் கல்வி கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று சிண்டிகேட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அவரை சஸ்பெண்ட் செய்த பிறகே இந்த விசாரணையை நடத்த வேண்டும். அவர் பணியில் இருக்கும்போதே விசாரணை நடந்தால், அவர் விசாரணையை திசை திருப்பவோ, தவறாக வழிநடத்தவோ வாய்ப்புள்ளது என்பது பலருடைய சந்தேகம்.ஆராய்ச்சித்துறையின் அவலம்பிஎச்.டி., சேர்க்கை மற்றும் வழிகாட்டுனர்கள் ஒதுக்கீட்டில் யு.ஜி.சி. விதிமுறை மீறப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.பிஎச்.டி., சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்த யு.ஜி.சி., வற்புறுத்தியபோது, பெயர் அளவுக்கு தேர்வு நடத்தி, அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்து, அதன் மூலம் வழிகாட்டுனர்களைத் தேர்வு செய்வதில் முறைகேடு நடக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.எனவே, கடந்த நான்கு ஆண்டுகளில் பிஎச்.டி.,இல் எத்தனை பேர் சேர்ந்தனர்? எத்தனை பேருக்கு பட்டம் வழங்கப்பட்டுள்ளது? எத்தனை பேருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் நிலுவையில் உள்ளன? அதற்கு என்ன காரணம்? இதுகுறித்து சிறந்த கல்வியாளர்கள் ( ஐ.ஐ.டி., ) கொண்ட குழு விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது துணைவேந்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறிய நியமனம்மக்கள் தொடர்பு அலுவலர் (பி.ஆர்.ஓ.,) நியமனத்தில் விதி மீறப்பட்டுள்ளது என ஜன.,29 வெளியான தினமலர் செய்தியில் விளக்கமாக சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது இப்பணியிடம் &'உதவி பதிவாளர்&' அந்தஸ்திலானது. ஆனால் தற்போதுள்ள அறிவழகன், &'கண்காணிப்பாளராக&' தான் உள்ளார்.பலர் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், பி.ஆர்.ஓ., மட்டும் எவ்வித நடவடிக்கைக்கும் ஆளாகாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவரை “தொந்தரவு செய்ய வேண்டாம்" என மேலிடத்திலிருந்து நிர்பந்தம் வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சிலர் முயற்சி எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.
கல்வித்தகுதி அங்கீகாரம்உதவிப் பேராசிரியர் கல்வித்தகுதி அங்கீகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கனவே செய்தி வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில், &'குறிப்பிட்ட ஒரு கல்லுாரியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்&' என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த விஷயத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டீன் நல்லகாமன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மெகா பணியிட மாற்றம் போல் முறைகேட்டுக்கு எதிரான துணைவேந்தரின் நடவடிக்கைகள் அடுத்தடுத்து தொடர வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews