அசல் சான்றிதழ் வைத்திருக்கக்கூடாது: பல்கலை அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 17, 2019

அசல் சான்றிதழ் வைத்திருக்கக்கூடாது: பல்கலை அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அசல் சான்றிதழ் வைத்திருக்கக்கூடாது:பாரதியார் பல்கலை அறிவுறுத்தல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அசல் சான்றிதழ்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்க கூடாது என, கல்லுாரி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்று பாரதியார் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) வனிதா தெரிவித்தார். பல்கலை கழக மானியக்குழு விதிமுறைகளின்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கல்வித்தகுதி உள்ளிட்டஅசல் சான்றிதழ்களை, கல்வி நிறுவனத்தினர் வைத்திருக்கக் கூடாது. உண்மைத்தன்மை ஆய்வு சமயத்தில் மட்டும் பெற்று, உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும்.
ஆனால், பல கல்வி நிறுவனங்கள் அசல் சான்றிதழ்களை வைத்துக்கொள்வதாகவும், கல்லுாரியிலிருந்து வெளியேறும் சமயங்களில் மாணவர்களிடம் முழுமையான கட்டணங்களை செலுத்தவும், ஆசிரியர்களிடம் மூன்று மாதம் அல்லது ஆறு மாத ஊதியத்தை வழங்கவும், கட்டாயப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் பதிவாகி வருகின்றன.இதுகுறித்து, பாரதியார் பல்கலைபதிவாளர் (பொறுப்பு) வனிதாகூறுகையில், அசல் சான்றிதழ்களை ஆய்வுகள் முடிந்ததும், மாணவர்களும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
இது குறித்து கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். புகார்களை, சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துப்பூர்வமாக பல்கலையில் சமர்ப்பித்தால், உரிய நடவடிக்கை மேற்கொண்டு அசல் சான்றிதழ் உடனடியாக பெற்று வழங்கப்படும்,'' என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews