இன்ஸ்பயர் மனக்' திட்டம்: 259 மாணவர்கள் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

இன்ஸ்பயர் மனக்' திட்டம்: 259 மாணவர்கள் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
நாமக்கல்: உயர்கல்வி படிக்கும் மாணவர்களை, அறிவியல் பக்கம் திருப்பும் வகையில், மத்திய அரசு, ஐந்தாண்டு திட்டமாக, 'புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள்' (இன்ஸ்பயர்) செயல்படுத்தப்பட்டது 'இன்ஸ்பயர் மனக்' திட்டத்தில், மாவட்டத்தில், 259 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தில், அறிவியல் கண்டுபிடிப்புக்கு, ஒவ்வொரு மாணவருக்கும், 5,000 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது தமிழகத்தில், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பக்கழகம் மூலம், இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில் (2018-19), இத்திட்டம், 'இன்ஸ்பயர் மனக்' என, மாற்றப்பட்டுள்ளது
ஊக்கத்தொகையும், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மாணவர்கள், அறிவியல் ஆய்வுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்தந்த பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், தேர்வு செய்த மாணவர்களின், அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவித்து, அவற்றை கொண்டு, மாவட்ட, மாநில, தேசிய அளவில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். தேசிய கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் மாணவர்களின், புதிய கண்டுபிடிப்புக்கு, அரசே காப்புரிமை பெற்றுத்தருகிறது
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், ஊராட்சி நடுநிலைப்பள்ளிகளில், 127 பேர், அரசு பள்ளிகளில், 97, அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 13, தனியார் பள்ளியில், 20, சி.சி.எஸ்.சி., பள்ளியில், 2 என, மொத்தம், 259 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்கில், தலா, 10 ஆயிரம் என, மொத்தம், 25.90 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews