உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 22, 2023

Comments:0

உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவு



உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக என்எம்சி முதுநிலை மருத்துவக் கல்வி வாரியத்தின் செயலா் டாக்டா் அஜேந்தா் சிங் வெளியிட்ட அறிவிப்பு:

முதுநிலை மருத்துவம், உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான கால அளவு, வகுப்புகள் தொடங்கும் தேதிகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் எழும்போது, அதற்காக முதுநிலை மருத்துவக் கல்வி வாரிய விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக கரோனா பாதிப்பின் காரணமாக உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான வகுப்புகள் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை.

அதேவேளையில், நிகழாண்டில் அந்த வகுப்புகள் கடந்த மாதமே தொடங்கப்பட்டுவிட்டன.

இதன் காரணமாக அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் அனைத்தும் டிச.31-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews