Breaking

Sunday, August 28, 2022

மின் வாரியத்தில் காலிப்பணியிடம்

மின் வாரியத்தில் காலிப்பணியிடம் உடனே நிரப்ப வேண்டும்: மின்கழக தொமுச கோரிக்கை

மின்கழக தொமுச சார்பில், மின்வாரிய இயக்குனருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

மின்பகிர்மான வட்டங்களை நிர்வாக ரீதியாக பிரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை் நடத்த வேண்டும். 56,000 காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்பி, பணியாளர்கள் மற்றும் பொறியாளர்களின் வேலைப்பளுவை குறைக்க வேண்டும். 5000 கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். மேலும் படித்த இளைஞர்களுக்கு நேரடி நியமனம் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் விரைவில் எட்டப்பட வேண்டும். புதிய பதவிகள் ஏதும் உருவாக்க கூடாது என தெரிவித்து வெளியிடப்பட்ட உத்தரவை உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog