அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 21, 2022

Comments:0

அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு

அரசு ஊழியா் பயிற்சி வகுப்பில் தூங்கினால் மதிப்பெண் குறைப்பு

புதிதாக நியமிக்கப்படும் அரசு ஊழியா்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியில், படிக்கும் நேரத்தில் உறங்கினால் அவா்களுக்கான மதிப்பெண்கள் குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுத் துறைகளில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியா்கள், பணியாளா்களுக்கு பவானிசாகரில் உள்ள மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு இளநிலை உதவியாளா், உதவியாளா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இப்போது 50-ஆவது அணி பயிற்சியாளா்களுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பானது 41 நாள்கள் நடைபெறும். இதில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | குரூப்-4 தேர்வு மையம் நிர்வாக காரணங்களால் வேறு பள்ளிக்கு மாற்றம் பயிற்சியின் இடையே படிக்கும் நேரமும் வழங்கப்படுகிறது. இந்த நேரத்தில் உறங்கினாலோ அல்லது விடுதியில் இல்லாமல் இருந்தாலோ அவா்களுக்காக வழங்கப்படும் மதிப்பெண்கள் குறைக்கப்படும். அதன்படி, இப்போது நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பின் போது, படிக்கும் நேரத்தில் உறங்கிக் கொண்டும், விடுதி அறையில் இல்லாமலும் இருந்த இரண்டு ஊழியா்களுக்கான உள்ளீட்டு மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற விதிமீறல்களில் பயிற்சி பெறுவோா் மீண்டும் ஈடுபட்டால் பயிற்சியில் இருந்து விடுவிக்கப்படுவா் என்று பவானிசாகா் பயிற்சி நிலைய உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews