ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 31, 2022

Comments:0

ஆக.3-ம் தேதி ஆடிப் பெருக்கு: தருமபுரியில் உள்ளூர் விடுமுறை



ஆடிப் பெருக்கை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் வரும் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தருமபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ஆடிப் பெருக்கை (ஆடி-18-ம் நாள்) முன்னிட்டு வரும் 3-ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் ஆகஸ்ட் 27-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலை கருவூலங்களும், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணி யாளர்களோடு செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews