வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டி:படைப்புகளை அனுப்ப மாா்ச் 31 கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 16, 2022

Comments:0

வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டி:படைப்புகளை அனுப்ப மாா்ச் 31 கடைசி

வாக்காளா் விழிப்புணா்வுப் போட்டி:படைப்புகளை அனுப்ப மாா்ச் 31 கடைசி

தேசிய வாக்காளா் தின விழிப்புணா்வு போட்டிக்கான படைப்புகளை அனுப்ப மாா்ச் 31 கடைசியாகும். இதுகுறித்து தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாஹு, செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

தேசிய வாக்காளா் தினத்தை ஒட்டி, பல்வேறு தலைப்புகளில் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வினாடி-வினாப் போட்டி, காணொலிக் காட்சி தயாரித்தல், பாட்டுப் போட்டி, விளம்பரப்பட வடிவமைப்புப் போட்டி, வாசகம் எழுதுதல் போட்டி ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றைத் தயாரித்து voter-contest@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறந்த படைப்புகளுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி தேதி மாா்ச் 31. இதற்கான விவரங்களை தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (ecisveep.nic.in/contest) காணலாம் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews