Breaking

Monday, February 28, 2022

ஆசாமி பேச்சை நம்பிய ஆசிரியை; 10 பவுன் ஏமாந்து கதறல்

ஆசாமி பேச்சை நம்பிய ஆசிரியை 10 பவுன் ஏமாந்து கதறல்

ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி பிரேமா. வயது 59. பாண்டேஸ்வரம் என்ற கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். பள்ளிக்கு செல்ல ஆவடி பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டு இருந்தார்.

இதையும் படிக்க | வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் வேலை -!விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.03.2022

மாஸ்க் அணிந்தபடி வந்த ஒருவர் மேரியிடம் பேசினார். தன்னை அரசு அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டார். இந்த ஏரியாவில் செயின் பறிப்பு அதிகம் உள்ளது. எனவே நகைகளை கழட்டி பையில் வைத்துக்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். மேரியும் தங்க செயின் மற்றும் வளையல்களை கழட்டி பையில் வைக்க முயன்றார். அப்போது தன்னுடன் பேசிக்கொண்டு இருந்த நபர் மற்றும் தொடந்து வந்த இன்னொருவர் , 10 சரவனை ஆட்டை போட்டு தப்பினர். ஆசாமிகளை விரட்டி பிடிக்க முயன்றார் மேரி. அதற்குள் அவர்கள் தப்பினர்.போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்

1 comment:

  1. Despite, CCTV recordings available,why the culprits not arrested and the stolen valuables not restored to the victim?

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog