அரசாணை (நிலை எண்.91; நாள். 22.11.2021 - ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 22, 2021

Comments:0

அரசாணை (நிலை எண்.91; நாள். 22.11.2021 - ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நகம் கல்வி விடுதிகள் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்பு கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் புதிய ஆதிதிராவிடர் நல கல்லூரிமாணவியர் விடுதிகள் தோற்றுவிக்க நிர்வாக ஒப்பளிப்பு ஆணை வெளியிடப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் ஆதிநத)துறை

அரசாணை (நிலை எண்.91 நாள். 22.11.2021

கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம் ஆகிய மூன்று இடங்களில் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

ஆணை:

மாண்புமிகு அமைச்சர், ஆதிதிராவிடர் நலம் அவர்கள் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் மூன்று புதிய கல்லூரி மாணவியர் விடுதிகள் ரூ.2 கோடி செலவில் தொடங்கப்படும்"

2 மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில் மேலே படிக்கப்பட்ட கடிதத்தில் ஆதிதிராவிடர் நல ஆணையர் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், கள்ளக்குறிச்சி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கீழ்க்கண்டவாறு தலா 50 மாணவியர்கள் வீதம் தங்கிப் பயில ஏதுவாக மூன்று ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதிகள், தொடரும் செலவினமாக ரூ9136,104/- மற்றும் தொடரா செலவினமாக ரூ.14,98,500/- ஆக மொத்தம் ரூ.106,34,604/ செலவினத்தில் துவங்கிட நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு அளித்து ஆணை வெளியிடுமாறு அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்:

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews