பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 04.10.2021 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 02, 2021

Comments:0

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை 04.10.2021 முதல் மாணவர்களுக்கு வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் ( Original Mark Certificates ) வழங்குதல் குறித்த தேர்வுத்துறையின் செய்திக்குறிப்பு :

மார்ச் 2021 , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) அனைத்து பள்ளி மாணவர்களும் 04.10.2021 ( திங்கள் கிழமை ) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

முக்கியக் குறிப்பு :

1. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள் / பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

2. மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள் / பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்றுதல் வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews