மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

Comments:0

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் விசாகன் தகவல்!


திண்டுக்கல் மாவட்டத்தில் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் தேசிய அடையாள வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர் அட்டை வழங்கும் முகாம்கள் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் நடைபெற்று வந்தது. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தி தேசிய அடையாள மேற்கொள்ளப்பட்டுள்ளது. அட்டை வழங்கிட நடவடிக்கை


அதன்படி, வரும் 16-09-2021 அன்று நத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 21-09-2021 அன்று வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 23-09-2021 அன்று நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 29-09-2021 அன்று வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 05-10-2021 அன்று அன்று குஜிலியம்பாறை ஊராட்சி அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 07-10-2021 அன்று வத்தலக்குண்டு ஒன்றிய ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 12-10-2021 அன்று ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 20-10-2021 அன்று தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 27-10-2021 அன்று ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 29-10-2021 அன்று சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 09-11-2021 அன்று ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், அன்று பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், 11-11-2021 அன்று பழனி 16-11-2021 அன்று திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக, கூட்ட அரங்கத்திலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு, முகாம்கள் நடைபெற உள்ளது. முகாமில் கலந்துகொள்ள வரும் மாற்றுத்திறனாளிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 4, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் நேரில் வந்து பயன் பெறலாம். ஏற்கனவே, தேசிய அடையாள அட்டை பெற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ள தேவையில்லை.


மேலும் விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews