ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 22, 2021

Comments:0

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மீண்டும் உயர்வு

ஒன்றிய அரசு ஊழியர் களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதால், 48லட்சம்ஒன் றிய அரசு ஊழியர்களும், 50 லட்சம் பென்சன்தாரர் களும் பயன் பெறுவர்.
ஒன்றிய அரசு ஊழி யர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அக விலைப்படி உயர்த்தப்ப டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக கடந்த - ஒன்றரை ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்த் தப்படாமல் இருந்தது. இந் நிலையில் கடந்த மாதம் அவர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவீ தம் உயர்த்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ள தால், விரைவில் அகவிலைப் படி உயர்வுக்கான ஒப்பு தலை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே 28 சதவீதம் அக விலைப்படி உயர்வு வழங் கப்பட்டு வரும் நிலையில், தற்போது இது 31 சதவீத மாக உயர்த்தப்படுகிறது. ஜூலை மாதத்தில் இருந்து இந்த தொகை வழங்கப்பட உள்ளதால், 48 லட்சம் ஒன் றிய அரசு ஊழியர்களும், 50லட்சம் பென்சன்தாரர் களும் பயன் பெறுவார்கள் என்று பணியாளர் நல அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews