தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 8 மணி நேர வேலை அறிவிப்பு வாபஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 09, 2021

Comments:0

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான 8 மணி நேர வேலை அறிவிப்பு வாபஸ்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தினமும் 8 மணி நேரம் பணியாற்ற வேண் டும் என்று பிறப்பித்த உத்தரவை குஜராத் மாநில அரசு புதன்கி ழமை திரும்பப் பெற்றது. ஆசி ரியர்கள் சங்கங்கள் உள்பட பல் வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு ஏற்பட்டதையடுத்து அந்த மாநில பாஜக அரசு தனது முடிவை திரும்பப்பெற்றுள்ளது.

முன்னதாக, அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமைச் சட்டத் தின்கீழ் தொடக்கப் பள்ளி ஆசி ரியர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை 8 மணி நேரமும், சனிக்கி ழமை 5 மணி நேரமும்பணியாற்ற வேண்டும் என்ற அறிவிப்பை அந்த மாநில அரசு அண்மையில்வெளியிட்டது. தற்போது இதை விட 2 மணி நேரம் குறைவாகவே ஆசிரியர்கள் பணியாற்றி வருகின் றனர்.

அரசின் இந்த திடீர் முடிவுக்கு ஆசிரியர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸும் அரசின் முடிவை திரும்பப் பெற வலியுறுத்தியது.

தொடக்கக் கல்வி என்பது மிக வும் சிறிய வயதினருக்கு கற்பிக்கப் படுவது; அதற்கு மிகுந்த பொறு மையும் நிதானமும் தேவை. மற்ற பணிகளைப் போல அதிக நேரம் பணியாற்றினால் அதிக பயன் கிடைக்கும் என்பதை தொடக்கக் கல்வியை கற்பிப்பதில் கடைப்பிடிக்கமுடியாது. ஒரே நாளில் அதி கம் பணியாற்றினால் மாணவர்க ளுக்கு அதிகம் கற்றுக் கொடுத்து விட முடியும் என்று நினைப்பது தவறானது என்று ஆசிரியர்கள் சங்கங்கள் தெரிவித்தன. இந்நிலையில், குஜராத் மாநில அமைச்சரவைக் கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது. இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்க ளுக்கு 8 மணி நேர வேலை என்ற அறிவிப்பை திரும்பப் பெறு வது என்று முடிவெடுக்கப்பட் டது. தங்கள் பணியை திருப்தி யாக செய்து முடித்துவிட்டோம் என்று ஆசிரியர்கள் கருதும் நேரம் வரை அவர்கள் பணியாற் றலாம் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews