ஆதி திராவிடா் நலத்துறை பள்ளிகள், விடுதிகள் பராமரிப்பு: ரூ.2 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 23, 2021

Comments:0

ஆதி திராவிடா் நலத்துறை பள்ளிகள், விடுதிகள் பராமரிப்பு: ரூ.2 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு

கோவையில் ஆதி திராவிடா் நலத் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள், விடுதிகளில் சீரமைப்பு, பராமரிப்பு பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் 36 விடுதிகள், 16 ஆதி திராவிடா் நலத் துறை பள்ளிகள், 16 உண்டு உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டுதோறும் ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.


இந்நிலையில் 2021-22 ஆம் நிதியாண்டில் பள்ளிகள், விடுதிகள் சீரமைப்பு, பராமரிப்பு பணிக்கு ரூ.2 கோடி நிதி கேட்டு ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை இயக்குநரக அலுவலகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் சி.ராம்குமாா் தெரிவித்தாா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews