Breaking

Friday, August 13, 2021

பாரதியார் பல்கலைக்கழக எம்.ஃபில், பிஹெச்.டி. தேர்வு - தேர்வு மையங்கள் அறிவிப்பு

கோவை பாரதியார் பல்கலைக்க ழக எம்ஃபில், பிஹெச்.டி. (பகுதி 1), எக்ஸ்டெர்னல் பிஹெச்.டி. (பகுதி 1) படிப்புக்கான எழுத்துத் தேர் வுகள் வரும் அக்டோபர் 21, 23, 25 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்தத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதன்படி, பாரதியார் பல்கலைக்கழக துறைக ளின் அனைத்துப் பிரிவு மாணவர்கள், எக்டெர்னல் பிஹெச்.டி. மாணவர்களுக்கு, பல்கலைக்கழக தேர் வாணையர் அலுவலகத்தில் தேர்வு மையம் அமைக் கப்படுகிறது. கோவை மாவட்டங்களைச் சேர்ந்தவர் கள், பதிவு பெற்ற ஆராய்ச்சி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு டாக்டர் என்.ஜி.பி. கலை, அறிவி யல் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.

தாராபுரம், உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த அனைத்து பாடப்பிரிவு மாணவர்களுக்கும், பொள்ளாச்சிகமலம் கலை, அறிவியல் கல்லூரியிலும், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு உதகை அரசுகலைக்கல்லூரியிலும்,திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியி லும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஸ்ரீ வாசவி கல்லூரியிலும், தில்லி ஆளுகைக்குள்பட்ட மாணவர்களுக்கு தில்லியில் உள்ள டிஐபிஏஎஸ் வளா கத்திலும் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மேற்கண்ட மையங்களில் தேர்வுக்கான நுழை வுச் சீட்டுகளை அக்டோபர் 18 ஆம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் (பொறுப்பு) இரா.விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog